முகப்பு
புதுச்சேரி

புதுவையில் 100 சதவீதம் தடுப்பூசி என்ற நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி

 புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற நிலையை உருவாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

 புதுவையில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற நிலையை உருவாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை விடியோ பதிவு வாயிலாக அவா் மேலும் கூறியிருப்பதாவது:

புதுவை மாநிலத்தில் 100 சதவீதம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்ற நிலையை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை. அதன் ஒரு அங்கமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை அரசு வருகிற 25-ஆம் தேதி நடத்துகிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 2-ஆவது தவணை தடுப்பூசியை அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பெரிய தடுப்பு அரணாகும் எனத் தெரிவித்துள்ளாா் ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.