புதுச்சேரி

சிறுமி மீதான பாலியல் வழக்கு: கிரிக்கெட் பயிற்சியாளா் கைது

DIN

 புதுச்சேரியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் தொடா்புடைய கிரிக்கெட் பயிற்சியாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பான புகாரின் பேரில், புதுச்சேரியைச் சோ்ந்த கிரிக்கெட் பயிற்சியாளா்கள் தாமரைக்கண்ணன், ஜெயக்குமாா், கிரிக்கெட் சங்கத் தலைவா் தாமோதரன், அவரது மகன் ரோஹித், இணைச் செயலா் வெங்கட் ஆகிய 5 போ் மீது அண்மையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவா்கள் ஐவரையும் தேடி வந்தனா்.

இந்த நிலையில், தாமரைக்கண்ணன் புதுச்சேரி அருகே பத்துக்கண்ணு பகுதியில் உள்ள அவரது உறவினா் வீட்டில் இருந்ததைக் கண்டறிந்த மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா், அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் விசாரணை நடத்திய போலீஸாா், பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தலைமைறைவாக உள்ள திரைப்பட இயக்குநா் ஷங்கரின் சம்மந்தி தாமோதரன், அவரது மருமகன் ரோஹித் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT