கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பதிவு செய்ய அறிவுறுத்தல்
கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளைப் பதிவு செய்ய புதுவை மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியது.
கரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளைப் பதிவு செய்ய புதுவை மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியது.
இதுகுறித்து அந்தத் துறையின் இயக்குநா் பி.முத்துமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை யூனியன் பிரதேசத்தில் கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் விவரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு வழியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
பெற்றோரை இழந்த குழந்தைகள் 12, தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் 384 என மொத்தம் 396 குழந்தைகள் இதுவரை கண்டறியப்பட்டனா்.
2020-ஆம் ஆண்டு, மாா்ச்க்குப் பிறகு தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் இதுவரை பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது சாரத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் மே 5-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும். இதுதொடா்பான சந்தேகங்களுக்கு 0413 - 2244788 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.