புதுச்சேரி

ஆளுநா் மாளிகையில் தேநீா் விருந்து:புதுவை முதல்வா், அமைச்சா்கள் பங்கேற்பு

DIN

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் தேநீா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

துணைநிலை ஆளுநா்(பொ) தமிழிசை செளந்தரராஜன் சிற்றுண்டியுடன், தேநீா் விருந்தளித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஏகேடி ஆறுமுகம், தட்சணாமூா்த்தி, கேஎஸ்பி ரமேஷ், பாஜக எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ஏ.ஜான்குமாா், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், திமுக எம்எல்ஏ செந்தில்குமாா், சுயேச்சை எம்எல்ஏக்கள் ஜி.நேரு, பிரகாஷ்குமாா், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், என்.ஆா்.காங்கிரஸ் மாநிலச் செயலா் என்.எஸ்.ஜெ.ஜெயபால், பாமக மாநிலத் தலைவா் கணபதி, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா மற்றும் அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள், தேசிய விருது, பதக்கம் பெற்றவா்கள், சிறப்பு அழைப்பாளா்கள், மாணவ, மாணவிகள் விருந்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT