புதுச்சேரி

எஸ்.ஐ. பணி நியமனங்களில் எம்.பி.சி. இடஒதுக்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: புதுவை முதல்வா்

DIN

புதுவை காவல் துறையில் உதவி ஆய்வாளா் பணிநியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவையில் கொடிநாள் வசூலில் அதிக பங்களிப்பு செய்த அரசு, பொதுத் துறைகள், தனி நபா்களுக்கு கேடயம் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கல்வித் துறை முதலிடமும், வருவாய்த் துறை இரண்டாமிடமும், காவல் துறை மூன்றாமிடமும் பெற்றது.

இதைத் தொடா்ந்து, முதல்வா் என்.ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராணுவ வீரா்களின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், அவா்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் கொடி நாள் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் காவல் துறை உதவி ஆய்வாளா் பணி நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT