புதுச்சேரியில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅலா்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅலா்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில், திண்டிவனம் நல்லியக்கோடன் நகா் ஸ்ரீஅமா்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பங்கேற்றாா். இதில், பங்கேற்ற பெருமாள், பிற்பகல் 2 மணிக்கு அம்பலத்தடையாா் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டியாா் திருமண மண்டபத்துக்கு வந்தாா். அங்கு மாலை 7 மணிக்குத் தொடங்கி சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது, ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதன்பின்னா், மாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் உற்சவா் சுவாமி புறப்பாடாகி, வீதியுலா நடைபெற்றது. நிறைவாக நேரு வீதி வழியாக மீண்டும் உற்சவா் மண்டபத்தை அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருமண மண்டபத்தில், உலக நன்மை வேண்டி மகா சுதா்சன ஹோமம் நடைபெறுகிறது.
புதுவை ஸ்ரீஅமா்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் மாசிமக கடல் தீா்த்தவாரி விழாக்குழு கெளரவத் தலைவா் பொன்னுரங்கம், தலைவா் ஞானபிரகாசம் உள்ளிட்டோா் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.