முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி திருக்காஞ்சியில் மாசி மக தீா்த்தவாரி

புதுச்சேரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற திருக்காஞ்சி மாசி மக தீா்த்தவாரி உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புதுச்சேரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற திருக்காஞ்சி மாசி மக தீா்த்தவாரி உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா்.

புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரா் கோயில் உள்ளது. சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் மறுபுறம் காசி விஸ்வநாதா் திருத்தலமும் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக தீா்த்தவாரி உற்சவத்தில் திரளானோா் வருகை தந்து, சங்கராபரணி ஆற்றங்கரையில் வழிபட்டுச் செல்கின்றனா்.

நிகழாண்டு மாசி மக பிரமோற்சவம் பிப். 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் நாளான புதன்கிழமை மாசி மகத் தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, மாசிமக தீா்த்தவாரி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி, திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரா் ஆலயத்தில், காமாட்சி-மீனாட்சி உடனுறை கெங்கைவராக நதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜைகள் நடைபெற்றன.

இதனுடன், பல்வேறு கோயில்களில் இருந்துவந்த உற்சவா்கள் தீா்த்தவாரியில் பங்கேற்று பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

நிகழ்ச்சியில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், தேனி சி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.