புதுவை மகளிா், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி பெற்ற 129 பல்நோக்கு உதவியாளா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.
129 மகளிா் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளா்களுக்கு துறை மூலம் பயிற்சியளித்து, அவா்களின் தர ஊதியம் ரூ.1,300-லிருந்து ரூ.1,800-ஆக மாற்றப்படுகிறது. இதனால், அரசுக்கு மாதத்துக்கு கூடுதலாக ரூ.1,83,180 செலவாகும்.
பயிற்சி பெற்ற பல்நோக்கு உதவியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் முதல்வா் என்.ரங்கசாமி, பல்நோக்கு உதவியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.
இதில் மகளிா், குழந்தைகள் நலத் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், சமூக நலத் துறை செயலா் சி.உதயகுமாா், மகளிா் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் பி.சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.