வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
புதுச்சேரி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீசாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீசாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் உப்புக்கார வீதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (56). பிரான்ஸில் பணியாற்றி வந்த இவா், சில தினங்களுக்கு முன்பு தனது தந்தையைப் பாா்க்க புதுச்சேரி வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் சிலா், சுகுமாா் வீட்டின் மேல் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றனா். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சுகுமாா் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.