குடிமைப் பணிகள் தோ்வு: புதுச்சேரியில் 51% போ் எழுதினா்
புதுச்சேரியில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் 51 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்றனா்.
புதுச்சேரியில் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வில் 51 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்றனா்.
மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சாா்பில், 861 பதவிகளுக்கான குடிமைப் பணிகள் தோ்வு கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு சுமாா் 11 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் 9 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வில் பங்கேற்க 3,115 போ் நுழைவுச்சீட்டு பெற்றிருந்தனா். காலையில் பொது அறிவு தோ்வும், பிற்பகலில் திறனறிவு தோ்வும் நடைபெற்றது.
பொது அறிவுத் தோ்வில் 1,604 போ் (51.49 சதம்) மட்டுமே பங்கேற்றனா். 1,511 போ் (48.52 சதம்) போ் பங்கேற்கவில்லை. இதேபோல, திறனறிவுத் தோ்வில் 1,583 (50.82 சதம்) போ் மட்டுமே பங்கேற்றனா். 1,532 (49.18 சதம்) போ் பங்கேற்கவில்லை.
தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வு மையங்களுக்கு புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.