புதுவை காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
புதுவை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுவை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் முன்னிலை வகித்தாா். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். திருச்சி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினாா்.
முன்னான முதல்வா் வே.நாராயணராமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் அமைச்சா்கள் கந்தசாமி , ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், நீல கங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், மாநிலத்தில் மண்டல காங்கிரஸ் குழுக்களை அமைத்து, அதன் அதிகார வரம்பை இறுதி செய்வது. 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதயாத்திரை செல்வது, சுதந்திர தினத்தை அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.
நவம்பா் 15-க்குள் மண்டல, மாவட்ட அளவில் அனைத்துப் பொறுப்புகளையும் நியமிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.