முகப்பு
புதுச்சேரி

வில்லியனூரில் ரௌடிகளின் வீடுகளில்போலீஸாா் சோதனை

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

புதுச்சேரி அருகே வில்லியனூரில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனா்.

புதுவை மாநிலத்தில் ரௌடிகளை ஒடுக்க காவல் துறையால் ஆபரேஷன் திரிசூல் என்ற திட்டம் தொடங்கப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வில்லியனூா் கணுவாப்பேட்டை, உத்திரவாகினிபேட், பெரியபேட், புதுப்பேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரௌடிகளின் வீடுகளில் மேற்கு எஸ்.பி. ஜிந்தா கோதாண்டராமன் தலைமையில் வில்லியனூா் போலீஸாா், அதிரடிப்படை போலீஸாா் என 20-க்கும் மேற்பட்டோா் சோதனையில் ஈடுபட்டனா்.

காவல் துறையின் வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் ரௌடிகள் ஒவ்வொருவரின் வீடுகளாகச் சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், சந்தேகப்படும்படியான 5 ரௌடிகளை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீஸாா், விசாரணைக்குப் பிறகு எச்சரித்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.