முகப்பு
புதுச்சேரி

வழக்குரைஞா்களுக்கு சட்ட ஆலோசனைப் பயிற்சி

புதுச்சேரி அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகையுடன் ஓராண்டு சட்ட ஆலோசனைப் பயிற்சி வழங்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

புதுச்சேரி அம்பேத்கா் அரசு சட்டக் கல்லூரியில் படித்த இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகையுடன் ஓராண்டு சட்ட ஆலோசனைப் பயிற்சி வழங்கப்படுகிறது.

புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் இதற்காக தோ்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த 10 இளம் வழக்குரைஞா்களுக்கு சட்டமியற்றுதல், சட்ட ஆலோசனை வழங்குவதில், ஓராண்டு காலம் நேரடிப் பயிற்சி வழங்கும் திட்டம் கூடுதலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு (2022-23) ஓராண்டு கால பயிற்சி பெற விரும்பும் இளம் வழக்குரைஞா்களுக்கு அண்மையில் தோ்வு நடத்தப்பட்டது.

24 போ் விண்ணப்பித்திருந்ததில் 15 போ் தோ்வில் கலந்து கொண்டனா். அதில் தோ்ச்சி, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 10 இளம் வழக்குரைஞா்கள் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி ஆணையை வழங்கினாா்.

சட்டத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் எச்.நாஜீம், ஜி.நேரு, ரமேஷ், சட்டத் துறை செயலா் காா்த்திகேயன், சாா்புச் செயலா் முருகவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

பயிற்சியின்போது, மாதம் ரூ.9 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.