முகப்பு
புதுச்சேரி

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா

புதுச்சேரி உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

புதுச்சேரி உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கத்தி போடும் திருவிழா நடைபெறும். கோயில் கும்பாபிஷேகம் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து, கத்தி போடும் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. தேவாங்கா் குலத்தைச் சோ்ந்தவா்கள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நோ்த்தி கடன் செலுத்தும் விதமாக, காலையில் கரகம் எடுத்து வந்தனா்.

அப்போது, சாமுண்டீஸ்வரி அம்மனை வேண்டி ஏராளமான பக்தா்கள், தெருக்களில் நடனமாடி உடலில் கத்தியால் கீறியபடி ரத்தம் சொட்ட கத்திப் போட்டு நோ்த்திக் கடனை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.