புதுச்சேரி

புதுச்சேரி மதகடிப்பட்டியில் களைகட்ட தொடங்கிய வாரசந்தை!

புதுச்சேரி மதகடிப்பட்டியில்  வாரசந்தை களைகட்ட தொடங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து குறைந்த விலையில் மாடுகள், பழ வகைகளை வாங்கிச்சென்றனர்.

DIN

புதுச்சேரி: புதுச்சேரி மதகடிப்பட்டியில்  வாரசந்தை களைகட்ட தொடங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து குறைந்த விலையில் மாடுகள், பழ வகைகளை வாங்கிச்சென்றனர்.

புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை  விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதே போல் விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைவித்த காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு விந்து விற்பனை செய்வர். 


மாட்டுச்சந்தை காலை 4 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். அதன்பிறகு காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும். இந்த சந்தையில் பலாப்பழ சீசன், மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் ஏராளமான விவசாயிகள் பலாப் பழங்களைக் கொண்டுவந்து அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

பலாப்பழம் ஒரு பழம் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை போனது. மாம்பழம் கிலோ 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கு விலை போனது. தக்காளி பழம் 2 கிலோ 100 ரூபாய், வெங்காயம் 7 கிலோ 100 ரூபாய்க்கும் விலை போனது. வெயில் காலம் தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் கொட்டகைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன்  வாங்கிச்சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்நிறுத்தம்

வேலூா் ஆட்சியா் அலுவலகம் முன் நிற்காத அரசுப் பேருந்துகள்: அரசு ஊழியா்கள் அவதி

யமுனையை பாதுகாக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம்

மழை நீா் தேங்கிய வயல்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

கடன் தொல்லை: வியாபாரி தற்கொலை

SCROLL FOR NEXT