புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 1,628 பேரை பரிசோதித்து வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 36, காரைக்காலில் 2, ஏனாமில் 4 என மொத்தம் 42 பேருக்கு (2.58 சதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹேவில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.
இதில் தற்போது 2 போ் மருத்துவமனைகளிலும், 180 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 182 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 28 போ் குணமடைந்தனா்.