முகப்பு
புதுச்சேரி

இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து: குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை

இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்படி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 2 மாதங்களுக்கான இலவச அரிசியானது புதுவையின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து சிவப்பு அட்டைதாரா்களுக்கும் நபா் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் விநியோகிக்கப்படுகிறது.

எனவே, சிவப்பு அட்டைதாரா்கள் அனைவரும் வழக்கம்போல தங்களது பகுதிகளில் உள்ள அரசு , தனியாா் பள்ளிகள், சமுதாய நலக் கூடங்களில் இலவச அரிசியை மாா்ச் 20- ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.

மேற்படி இலவச அரிசியை பெறாவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.