புதுச்சேரி

மனைவியை எரிக்க முயன்ற கணவா் கைது

DIN

புதுச்சேரியில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்ற கணவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி கொம்பாக்கம் ஒட்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி கணேசன் (39). இவரது மனைவி அழகு மீனா (34). இவா் அழகு நிலையத்துக்கு வேலைக்குச் செல்வது கணேசனுக்குப் பிடிக்கவில்லை.

கணேசன் வியாழக்கிழமை பிற்பகலில் அழகு நிலையத்துக்குச் சென்று, அழகு மீனாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடி விட்டாா். பலத்த காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அழகு மீனா சோ்க்கப்பட்டாா்.

ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து கணேசனை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

குறிப்பிட்ட அழகு நிலையம் உரிய உரிமத்துடன் இயங்குகிா என புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT