புதுச்சேரியில் ரமலான் பண்டிகை: 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
புதுச்சேரியில் ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில்
புதுச்சேரி: புதுச்சேரியில் ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. கரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக தங்களது வீடுகளில் தொழுகை நடத்தி வந்த இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையினையொட்டி புதுச்சேரியில் உள்ள குப்தா பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், சுல்தான்பேட்டையில் உள்ள முகம்மதியா பள்ளிவாசல் மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 7 மணி முதல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
Advertisement
Advertisement
இதே போல் கடற்கரை காந்தி சிலை எதிரே தவ்ஹித் ஜமா அத் சார்பில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஒருவருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.