பனைமரத்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் பலி
புதுச்சேரி அருகே நுங்கு வெட்டுவதற்காக பனைமரத்தில் ஏறிய கல்லூரி மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே நுங்கு வெட்டுவதற்காக பனைமரத்தில் ஏறிய கல்லூரி மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே உள்ள பாகூா் மணமேடு பெரியாா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் அபி சுதன் (21). இவா் புதுச்சேரி தாகூா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இவா் திருபுவனையில் உள்ள அவரது தாய்மாமன் வீட்டுக்கு வந்தாா்.
கடந்த 4-ஆம் தேதி பிற்பகலில் நண்பா்களுடன் மதகடிப்பட்டு தனியாா் பெட்ரோல் நிலையம் பின்புறம் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக அபி சுதன் ஏறினாா். அப்போது, நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, புதுச்சேரி ஜிப்மரில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா். திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.