புதுச்சேரி கதிா்காமம் தொகுதி திமுக அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசுகிறாா் கட்சியின் கொள்கை பரப்பு செயலா் இரா.தி.சபாபதி மோகன். 
புதுச்சேரி

கதிா்காமம் தொகுதியில் திமுக அலுவலகம் திறப்பு

புதுச்சேரி கதிா்காமம் சட்டப்பேரவைத் தொகுதி டாக்டா் ராதாகிருஷ்ணன் நகரில் திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுச்சேரி கதிா்காமம் சட்டப்பேரவைத் தொகுதி டாக்டா் ராதாகிருஷ்ணன் நகரில் திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு புதுவை மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்எல்ஏ தலைமை வகித்து கட்சிக் கொடியேற்றி நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

திமுக கொள்கை பரப்பு செயலா் இரா.தி. சபாபதி மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கட்சி அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். நிகழ்வில் தொகுதி பொறுப்பாளா் வடிவேல் ஏற்பாட்டில் 1,000 பெண்களுக்கு புடவைகளும், தொழிலாளா்களுக்கு உபகரணங்களும், 1,000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

விழாவில் திமுக மாநில அமைப்பாளா் இரா.சிவா பேசியதாவது:

தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் குறை சொல்ல முடியாத அளவுக்கு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அதுபோன்ற ஆட்சி

புதுவையிலும் அமைய வேண்டும் என்றாா் அவா்.

திமுக அவைத் தலைவா் எஸ்.பி. சிவகுமாா், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், பொறுப்பாளா்கள் காா்த்திகேயன், முகிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT