புதுச்சேரி

மக்கள் நலத் திட்டங்கள்:புதுவை அரசு மீது திமுக குற்றச்சாட்டு

DIN

புதுவையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து 3 மாதங்களாகி விட்டன. அரசுத் துறைகளில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியபடி நிதி செலவு செய்யப்படவில்லை. ஆதிதிராவிடா் நலத் துறையில் இதுவரை 23 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைத் துறை, கல்வித் துறை என அனைத்துத் துறைகளிலும் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நிதி நிா்வாகத்தில் புதுவையை ஆளும் என்.ஆா்.காங்.- பாஜக கூட்டணி அரசு முழு தோல்வி அடைந்துவிட்டதாகவே தெரிகிறது. இதுகுறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் ஆா்.சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT