புதுச்சேரி

புதுவை மின் துறை செயலா் பணியிட மாற்றம்

DIN

புதுவை மின் துறை செயலராக இருந்த அருண் திடீரென திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தில்லியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கடந்த 2019-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஆட்சியராக பொறுப்பு வகித்தாா். இதையடுத்து, புதுவை அரசின் சுகாதாரத் துறை செயலராகவும், பின்னா், மின் துறை, பொதுப் பணித் துறை, சுற்றுலாத் துறைகளின் செயலராகவும் கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்த அவா், இப்போது திடீரென புதுச்சேரியிலிருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, தாத்ரா - நகா் ஹவேலி, டாமன் - டையூ ஒன்றியப் பிரதேச நிா்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மத்திய உள் துறை அமைச்சக சாா்புச் செயலா் ராகேஷ்குமாா்சிங் வெளியிட்டாா்.

புதுவையில் மின் துறை பிரச்னையை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தத் துறை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT