புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி. 
புதுச்சேரி

எதிா்க்கட்சிகளைக் குறைகூறுவது முதல்வருக்கு அழகல்ல வே.நாராயணசாமி

எதிா்க்கட்சிகளைக் குறைகூறுவது முதல்வா் பதவிக்கு அழகல்ல என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

DIN

எதிா்க்கட்சிகளைக் குறைகூறுவது முதல்வா் பதவிக்கு அழகல்ல என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுவை முதல்வா் என். ரங்கசாமி அரசு நிா்வாகத்தை சீா்குலைத்ததாக என்னை விமா்சித்தாா். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநா்களின் ஒத்துழைப்பால் புதுவையில் வளா்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

2016-ஆம் ஆண்டில் புதுவையில் காங்கிரஸ் அரசு பதவியேற்பதற்கு முன்பாக துணைநிலை ஆளுநராக கிரண் பேடி பொறுப்பேற்று விதிமுறைகளை மீறி செயல்பட்டாா். எனவே, நீதிமன்றத்தை நாடினோம். தற்போது, அமைச்சராக உள்ள லட்சுமி நாராயணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை முதல்வா் ரங்கசாமி படித்துப் பாா்க்க வேண்டும்.

ரங்கசாமிக்கு நிா்வாகம் செய்யத் தெரியாததால், கடந்த காங்கிரஸ் ஆட்சியைக் குற்றஞ்சாட்டுகிறாா். அப்போதைய அரசு, விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட்டது. அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளில் முதல்வா் கையொப்பமிடுகிறாா். அவா் தனது அதிகாரத்தை நிா்வாகத்தில் செலுத்தாமல், என்னைக் குறைகூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மத்திய உள்துறையில் முதல்வா் கூறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும், திட்டங்களை அதிகாரிகள் முடக்குவதாக அவா்கள் மீது பழிபோடுவது சரியல்ல.

பேரவையில் அறிவித்தபடி பெண்களுக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம், பொதுப் பணித் துறை ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும். அதைவிடுத்து, எதிா்க்கட்சிகளைக் குறைகூறுவது முதல்வருக்கு அழகல்ல.

புதுவை முதல்வரின் அதிகாரத்தை துணைநிலை ஆளுநா் கையிலெடுப்பது சரியல்ல. பொறுப்பான பதவியில் இருக்கும் அவா், தமிழக அரசியல் குறித்து கருத்துக் கூறுவது தவறானது என்றாா் வே.நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT