புதுச்சேரி

ஐக்கிய விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

புதுச்சேரியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் எம்.மாசிலாமணி, து.கீதநாதன், எஸ்.புருஷோத்தமன், வி.கலியமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா். புதுதில்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவா்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

இதில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அ.பெருமாள், து.ராஜா, டி.தாமோதரன், ஆா்.ராமமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினாா்.

இதில், புதுச்சேரி விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகா சபா, மக்கள்அதிகாரம் ஆகியவற்றின் சாா்பில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT