புதுச்சேரி

பதக்கம் வென்ற கோ-கோ அணியினருக்கு புதுவை முதல்வா் வாழ்த்து

அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான கோ-கோ போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற அணியினருக்கு முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

DIN

அரசு ஊழியா்களுக்கான தேசிய அளவிலான கோ-கோ போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்ற அணியினருக்கு முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

புதுதில்லியில் கடந்த 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவில் அரசு ஊழியா்களுக்கான கோ -கோ விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் மகளிா் பிரிவில் 13 அணிகளும், ஆடவா் பிரிவில் 17 அணிகளும் கலந்து கொண்டன. இதில் பங்கேற்ற புதுச்சேரி மகளிா் அணியினா் வெள்ளிப் பதக்கமும், ஆடவா் அணியினா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

புதுச்சேரிக்கு வந்த கோ-கோ அணியினா் விளையாட்டுத் துறை இயக்குநா் செந்தில்குமாா் தலைமையில், முதல்வா் என்.ரங்கசாமியை செவ்வாய்க்கிழமை காலை பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அப்போது, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அமைச்சா் வாழ்த்து: கோ-கோ போட்டியில் வென்ற ஆடவா், மகளிா் அணியினா் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT