புதுச்சேரி

கஞ்சா விற்ற வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டு சிறை

புதுச்சேரியில் கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

DIN

புதுச்சேரியில் கஞ்சா விற்ற வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுச்சேரி கண் டாக்டா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். இவரது மகன் முகேஷ் என்ற வாழைக்கா (32). இவா் அந்தப் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு கஞ்சா விற்பதாக புகாா்கள் சென்றதையடுத்து, ஒதியன்சாலைப் போலீஸாா் சென்று அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 1.3 கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

இதுதொடா்பான வழக்கு விசாரணை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றமான புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி இளவரசன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், முகேஷு க்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் அமலாக்கத் துறை வழக்குரைஞா் என்.விநாயகம் ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT