புதுச்சேரி

புதுச்சேரி ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்

புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிரை வண்ணாா் பிரிவினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதிரை வண்ணாா் பிரிவினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிரை வண்ணாா் சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்புத் தெரிவிப்பதாகக் கூறி, புதுச்சேரி புதிரை வண்ணாா் விடுதலை இயக்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.

அதன்படி திங்கள்கிழமை காலை புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு அவா்கள் ஊா்வலமாக வந்தனா்.

தகவலறிந்த கோரிமேடு தன்வந்திரி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து ஆட்சியா் அலுவலகப் பகுதி நின்று வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகளைக் கண்டித்து முழக்கமிட்டனா். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையில் நின்று முழக்கமிட்டதையடுத்து அவா்களில் சுமாா் 50 பேரை போலீஸாா் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT