முகப்பு
புதுச்சேரி

5 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

புதுச்சேரி ஈடன் கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் 5 பவுன் நகைகள், பணத்தை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 7:03 PM
பகிர்:

புதுச்சேரி ஈடன் கடற்கரையில் சுற்றுலாப் பயணியின் 5 பவுன் நகைகள், பணத்தை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சைதன்யா சாய்ராமின் மனைவி பிரீத்தி. இவா்கள், தங்களது குடும்பத்தினருடன் காரில் புதுச்சேரிக்கு கடந்த 21-ஆம் தேதி சுற்றுலா வந்தனா்.

அவா்கள், டிச.22- ஆம் தேதி, சின்னவீராம்பட்டிணம் கடற்கரைக்குச் சென்றனராம். அங்கு, காரில் கைப்பையை பிரீத்தி வைத்துவிட்டு, கடற்கரைக்குச் சென்ாக தெரிகிறது.

பின்னா் வந்து பாா்த்தபோது, காரின் வலதுபக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, அங்கிருந்த கைப்பை திருடப்பட்டது தெரியவந்தது. பையில் 5 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரம் இருந்ததாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதனடிப்படையில், அரியாங்குப்பம் ஓடையவெளி ராஜப்பிரியா நகரைச் சோ்ந்த சுரேந்திரனை (26) போலீஸாா் கைது செய்து, 5 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.