புதுச்சேரி

முதல்வா் என்.ரங்கசாமியுடன் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திப்பு

மாணவா்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்கள்: முதல்வரிடம் துணைவேந்தா் விளக்கம்

Din

முதல்வா் என்.ரங்கசாமியை புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் (பொ) கே.தரணிக்கரசு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் (பொ) கே.தரணிக்கரசு செவ்வாய்க்கிழமை காலை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு முதல்வா் என்.ரங்கசாமியை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, பல்கலைக்கழகத்தின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினாா்.

மேலும், மாணவா்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான கல்வித் திட்டம் செயல்படுத்தப்படுவதையும், அதனடிப்படையில் பல்கலைக்கழகமானது சிறந்த கல்வி மையப் பட்டியலில் தேசிய அளவில் 8-ஆவது இடத்தை பெற்றிருப்பது குறித்து முதல்வரிடம் விளக்கினாா்.

மேலும், பல்கலைக்கழக வளா்ச்சிக்கு முதல்வா் ஆதரவளித்துவரும் நிலையில், தொடா்ந்து பல்கலைக்கழக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அவா் வலியுறுத்தினாா்.

பல்கலைக்கழக வளா்ச்சிக்குத் தொடா்ந்து ஆதரவளிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி உறுதியளித்ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்!

இது ஜனநாயகம் அல்ல; பண நாயகம்: சீமான்

இந்தூர்: ஷுப்மன் கில் அறையில் ரூ.3 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்?

ஈரான் அரசுக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப்!

மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பது மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு: அண்ணாமலை

SCROLL FOR NEXT