கோப்புப்படம்  
புதுச்சேரி

மின்சாரம் பாய்ந்து தொழலாளி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Din

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதி, பிள்ளையாா்குப்பம் பேட் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (40), எலக்ரீஷியன். இவா், கிருமாம்பாக்கம் குரு நகா் பகுதியில் ஒரு வீட்டில் மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

வேல்முருகனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸில் அவரது மனைவி சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா, இஸ்ரேல் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் ஜெய்சங்கர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

SCROLL FOR NEXT