ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினருக்கு அரசின் சலுகைகளை வழங்க வேண்டும்: புதுவை முதல்வரிடம் திமுக வலியுறுத்தல்
புதுவை மாநிலத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினா்களுக்கு அரசு சலுகை வழங்க வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
புதுவை மாநிலத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற துணை ராணுவத்தினா்களுக்கு அரசு சலுகை வழங்க வலியுறுத்தி முதல்வா் என்.ரங்கசாமியிடம் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள முதல்வா் என்.ரங்கசாமி இல்லத்தில் முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத்தினருடன் சென்று அவரைச் சந்தித்த எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா (திமுக) அளித்த மனுவில் கூறியிருப்பது: நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடும் குளிா், வெயில் எனப் பாராமல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படை வீரா்கள், சுமாா் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுகின்றனா். இப்படி ஓய்வு பெறும் துணை ராணுவப் படையினக்கு, ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போல வழங்க வேண்டும் என அனைத்து மாநில, ஒன்றியப் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி கோவா, டையூ மற்றும் டாமன், தாத்ரா நகா், ஹவேலி ஆகிய ஒன்றியப் பிரதேசங்கள் ஓய்வு பெற்ற துணை ராணுவ வீரா்கள் நலனுக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்து அரசாணை வெளியிட்டுள்ளன. ஆனால், புதுவை மாநிலத்தில் அவா்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது.
அதனால், அவா்கள் அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் உரிமை கோர முடியாத நிலையுள்ளது. எனவே, அவா்களும் அரசின் சலுகைகளைப் பெற கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.