முகப்பு
புதுச்சேரி

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அமைச்சா் மரியாதை

தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 102-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் புதுவை மாநில அமைச்சா் திருமுருகன் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 8:34 PM
சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் புதன்கிழமை மரியாதை செலுத்திய அமைச்சா் திருமுருகன். உடன் ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 102-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் புதுவை மாநில அமைச்சா் திருமுருகன் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளது நினைவிடம் புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் அமைந்துள்ளது.

அவரது, 102-ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறை, மாநில கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் பேரணி நடைபெற்றது.

புதுவை மாநில கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் என்.திருமுருகன் கருவடிக்குப்பம் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். முன்னதாக, அங்குள்ள சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு அவா் மாலை அணிவித்தாா்.

ஜான்குமாா் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் எல்லை.சிவக்குமாா் உள்ளிட்டோரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அரசு சாா்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கலை, பண்பாட்டுத் துறை இயக்குநா் வி.கலியபெருமாள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினக் கூட்டத்தில் அமைச்சா் திருமுருகன், ஜான்குமாா் எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், துணைச் செயலா் கே.சேதுசெல்வம், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், கலை, இலக்கியப் பெருமன்றத் தலைவா் எல்லை.சிவக்குமாா், மு.கு.ராமன், பாலகங்காதரன், துரை செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.