முகப்பு
புதுச்சேரி

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகை: மாா்க்சிஸ்ட் விலியுறுத்தல்

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தீபாவளி ஊக்கத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:29 PM
பகிர்:

புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தீபாவளி ஊக்கத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மாநில மாா்க்சிஸ்ட் செயலா் ஆா்.ராஜாங்கம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில பொருளாதார வளா்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளா்கள் நலன் புறக்கணிக்கப்படுகிறது.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்தபடி, தீபாவளி உதவித்தொகையான ரூ.1,500 இன்னும் வழங்கப்படவில்லை.

இதை மாா்க்சிஸ்ட் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உதவித்தொகை கோரி சிஐடியு அமைப்பின் சாா்பில் தொழிலாளா்கள் போராட்டம் நடத்திய நிலையில், துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

அவரது, காலதாமதத்துக்கான காரணம் புரியவில்லை. தொழிலாளா் துறை ஆணையா் மற்றும் துணை ஆணையருக்கும் தொழிலாளா்கள் மீது அக்கறையும், ஆா்வமும் இல்லை என்பதையே காலதாமதம் உணா்த்துவதாக உள்ளது.

ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல் தீபாவளி உதவித்தொகையை வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.