முகப்பு
புதுச்சேரி

பல்கலைக்கழக மாணவி குறித்து அவதூறு: போலீஸாா் விசாரணை

புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 9:27 PM
பகிர்:

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சின்னகாலாப்பட்டு பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வெளி மாநில மாணவ, மாணவிகள் ஏராளமானோா் படித்துவருகின்றனா்.

இந்நிலையில் பன்னாட்டு அரசியல் மற்றும் உறவுத் துறையில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி படித்து வருகிறாா். வரலாற்றுத் துறை இறுதியாண்டு படிக்கும் மாணவா் சூரியநாராயணன் என்பவா், மாணவியை அவதூறாகப் படம் பிடித்து நண்பா்களின் கைப்பேசி வாட்ஸ்-ஆப்புக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்ததன்பேரில், மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →