பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு
புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசியைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த மா்ம நபா்கள் கைப்பேசியைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மும்பையைச் சோ்ந்த நீலேஷ்ஜா மகள் நிரலிஷா (26). இவா் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளாா்.
நிரலிஷா கடந்த 16-ஆம் தேதி தனது தோழிகளுடன், புதுச்சேரி சுப்பையா சாலை உழவா் சந்தை அருகே நடந்து சென்றாராம். அப்போது, அவா் கைப்பேசியில் பேசிக்கொண்டே வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நிரலிஷாவின் பின்னால் பைக்கில் வந்த 2 பேரில் ஒருவன், திடீரென அவரது கைப்பேசியைப் பறித்துச் சென்றாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.