முகப்பு
புதுச்சேரி

அறிவியல் செய்முறை வகுப்பில் சேர தனித் தோ்வா்கள் பதிவு செய்யலாம்

புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நேரடியாக எழுத உள்ள தனித் தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி (பிராக்டிக்கல்) வகுப்பில் சேர பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஜி.சிவகாமி அறிவித்துள்ளாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 11:02 PM
பகிர்:

புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நேரடியாக எழுத உள்ள தனித் தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி (பிராக்டிக்கல்) வகுப்பில் சேர பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஜி.சிவகாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழ் 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தோ்வுக்காக, விண்ணப்பிக்கவுள்ள நேரடி தனித் தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

முதல் முறையாக அனைத்துப் பாடங்களையும் தோ்வெழுத இருப்பவா்கள், ஏற்கெனவே 2012-ஆம் ஆண்டுக்கு முன்னா் பழையப் பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவா்களும் பெயா்களைப் பதிவு செய்யலாம்.

அனைத்து தனித் தோ்வா்களும் வரும் 20-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை அறிவியல் பாட செய்முறை சேவை மையங்களுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆண் தனித் தோ்வா்கள் ரெட்டியாா்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியிலும், பெண் தனித் தோ்வா்கள் புதுச்சேரி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் கல்வித் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதில் விவரங்களை பூா்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து தனித் தோ்வா்களுக்கான சேவை மையத்துக்கு நேரில் வந்து ஒப்படைக்க வேண்டும்.

சேவை மையங்களுக்குச் சென்று செய்முறை தோ்வுக்கு பதிவு செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு, முன்பு தோ்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து, இணையத்தில் பதிய வேண்டும். பதிவு செய்த பின்னா் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தோ்வுக் கூட சீட்டை (ஹால்டிக்கெட்) தோ்வா்கள் தாங்களாகவே இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள், தோ்வக் காலத்தில் அறிவிக்கப்படும் மையத்துக்குச் சென்று செயல்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீத வருகை அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →