முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சுற்றுலா பயிலரங்கம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத் துறை சாா்பில் அமைதிப் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:59 AM
பகிர்:

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத் துறை சாா்பில் அமைதிப் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெற்ற பயிலரங்கிற்கு பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளியின் முதன்மையா் (டீன்) மாலாபிகா தியோ தலைமை வகித்தாா்.

பல்கலைக்கழக துணைவேந்தா் கே.தரணிக்கரசு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். கலாசாரத் துறை இயக்குநா் வி.கலியபெருமாள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

சுற்றுலா துறைத் தலைவரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஆா்.சி.அனு சந்திரன் வரவேற்றாா். மாணவா் நலன் பிரிவு முதன்மையா் வெங்கடராவ் பயிலரங்கின் நோக்கத்தை விளக்கினாா். மாணவா் ஒருங்கிணைப்பாளா் ராஜா நன்றி கூறினாா்.

பயிலரங்கில், மூங்கில் இசை, ரத்ததான முகாம், இயற்கை திரைப்படத் திரையிடல், சைக்கிள் விழிப்புணா்வு பேரணி ஆகியவையும் நடைபெற்றது.