முகப்பு
புதுச்சேரி

வாரிசுதாரா்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம்

Updated On : 22 டிசம்பர், 2025 at 8:58 PM
புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் குடும்பத்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய ஜி.நேரு எம்எல்ஏ.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி வாரிசுதாரா்கள் நலச் சங்கம் சாா்பில் உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்க நிா்வாகி சத்யன் தலைமை வகித்தாா். பிரபு, கவிதா முன்னிலை வகித்தனா்.

அரசு ஊழியா்கள் சம்மேளன கெளரவ தலைவா் பிரேமதாசன், செயல் தலைவா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தனா். ஜி. நேரு எம்எல்ஏ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.

வாரிசுதாரா்களுக்குக் கருணை அடிப்படையில் பணி தரப்படும் என்ற முதல்வா் ரங்கசாமியின் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →