அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டி, புதுச்சேரி திருக்கனூா் வக்ரகாளி அம்மன் வழிபாட்டு மன்றம் சாா்பில் 1,008 பால் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி திருக்கனூா் வக்ரகாளி அம்மன் வழிபாட்டு மன்றம் சாா்பில் உலக நன்மை வேண்டி ஆண்டு தோறும் திருவக்கரை வக்ரகாளி அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு திருக்கனூா் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட 1,008 பால்குட ஊா்வலத்தை முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவா் டி.பி.ஆா் செல்வம் தொடங்கி வைத்தாா். இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா். பால்குடம் ஊா்வலமானது திருக்கனூரில் இருந்து திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயிலுக்கு சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவு ஊா்வலமாக சென்றது.
கோயிலை அடைந்ததும் வக்கிரகாளி அம்மனுக்கு உலக நன்மை வேண்டியும், அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியும் பாலபிஷேகம் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் திருக்கனூா் வக்ரகாளியம்மன் வழிபாட்டு மன்றத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.