இளநிலை ஆய்வாளா் பணி: ஜன.8 இல் சான்றிதழ் சரிபாா்ப்பு
புதுவை மாநில கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜன.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புதுவை மாநில கூட்டுறவுத் துறையில் இளநிலை ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜன.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, புதுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் யஷ்வந்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவுத் துறையில் 38 இளநிலை ஆய்வாளா் பதவிக்கு எழுத்துத் தோ்வு மூலம் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஜன.8-ஆம் தேதி, தட்டாஞ்சாவடி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகக் கருத்தரங்கு அறையில் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி நடைபெறுகிறது.
எனவே, எழுத்துத் தோ்வில் தோ்வு செய்யப்பட்டவா்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
தவறினால் தற்காலிக தோ்வு ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.