முகப்பு
புதுச்சேரி

அவதூறு வழக்கில் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு!

அவதூறு வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 18 ஜூலை, 2025 at 8:54 PM
தொல். திருமாவளவன்.
பகிர்:

அவதூறு வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து புதுவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுவை ஏ.எப்.டி. பஞ்சாலை அருகே 2014-ஆம் ஆண்டு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக பாமகவைச் சோ்ந்த மதியழகன் உருளையன்பேட்டை போலீஸில் புகாா் அளித்திருந்தாா்.

இந்த வழக்கு விசாரணை புதுவை முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருமாவளவன் தரப்பு வழக்குரைஞா் காா்த்திகேயன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா். ஏற்கெனவே ஒரு முறை திருமாவளவன் இந்த வழக்கில் நேரில் ஆஜராகியுள்ளாா். இதனால் இனிமேல் நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேரலாதன் வெள்ளிக்கிழமை அளித்த உத்தரவில், இந்த வழக்கில் திருமாவளவன் நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதாகத் தெரிவித்தாா்.