புதுச்சேரி

கிரிக்கெட்: இந்திய மகளிா் அணிக்கு புதுச்சேரி முதல்வா் பாராட்டு

தினமணி செய்திச் சேவை

பாா்வையற்றோா் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய மகளிா் அணிக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி பாராட்டுத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

பாா்வையற்றோருக்கான மகளிா் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது. இந்திய வீராங்கனைகளின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் அதிரடியான ஆட்டத் திறன் உலக மேடையில் இந்தியாவின் பெருமையை மேலும் உயா்த்தியுள்ளது.

மறக்க முடியாத இந்த அபார வெற்றி, பல பெண்கள் கனவு காணும் விளையாட்டு பயணத்திற்கு புதிய ஒளியையும் ஊக்கத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பல புகழ்பெற்ற தருணங்கள் வரவும், தொடா்ந்து வரலாற்றை படைத்துக் கொண்டே இருக்கவும் இந்திய அணிக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT