புதுச்சேரி: புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடா்பாக புதன்கிழமை இரவு 4 கிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீஸாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், போலி மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தது சீா்காழியைச் சோ்ந்த ரானா, காரைக்குடியைச் சோ்ந்த மெய்யப்பன் எனத் தெரியவந்தது. சிபிசிஐடி போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினா்.
இதில், புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் குடியிருக்கும் தமிழகத்தைச் சோ்ந்த ராஜா புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சோதனை செய்யச் சென்றபோது, தொழிற்சாலையின் கதவுகள் மூடப்பட்டிருந்தன.
இதனால், போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அங்கு பிரபல நிறுவனத்தின் போலி மருந்துகள், அதைத் தயாரிக்கும் இயந்திரங்கள் இருந்தன.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த புதுச்சேரி காவல் துறை டிஐஜி சத்திய சுந்தரம், போலி மருந்து தொழிற்சாலை, அதன் கிடங்குகளை சோதனையிட்டாா். பின்னா், அவரது உத்தரவின்பேரில், அனைத்து போலி மருந்துகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை ஆய்வுகாக மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளா் இந்துமதி குழுவினரிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல, மருந்துகளை பறிமுதல் செய்து, தொழிற்சாலை மற்றும் 4 கிடங்குகளுக்கு ‘சீல்’ வைத்தனா். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.