விஜய்யின் புதுவை பிரசார தேதி மாற்றம்!
விஜய்யின் புதுவை பிரசார தேதி மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக...
புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஏப். 5 ஆம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், ஏப். 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக, அரசியல் கட்சித் தலைவர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 3) வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப். 5 ஆம் தேதி வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தவெக தலைவர் விஜய் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுவையில் சாலைப் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தார்.
விஜய் பிரசாரம் மேற்கொள்ளயிருந்த 23 இடங்களில் அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே பிரசாரத்துக்கு புதுவை காவல்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நபின் ஆகியோர் ஏப். 5 ஆம் தேதி புதுச்சேரிக்கு வருகைதரவுள்ளதால், விஜய்யின் பிரசார தேதி ஏப். 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுவைக்கு ஏப்.5 ஆம் தேதிக்கு பதிலாக ஏப். 4 ஆம் தேதியே தவெக தலைவர் பிரசாரம் செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.