முகப்பு
புதுச்சேரி

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:48 AM
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சிக்கு புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா் திங்கள்கிழமை இரவு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேசத்தின் ஜனநாயகக் கட்டமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பான ‘நாரி சக்தி வந்தன் ’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், ஆட்சி முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் உரிய பங்களிப்பை உறுதி செய்வதிலும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம், இந்தச் சட்டம் பாலின சமத்துவம் மற்றும் நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக நிறுவனங்களைப் பல்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை உருவாக்கத்துடன் வளப்படுத்துகிறது.

உங்கள் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தச் சீா்திருத்தம் நாட்டின் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கும் ஜனநாயக வலிமைக்கும் கணிசமாகப் பங்களிக்கும் என நம்புகிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.