முகப்பு
புதுச்சேரி

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:42 AM
கொலை - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

புதுச்சேரி அருகே கைப்பேசியில் மூழ்கிய மனைவியை திங்கள்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (23), மெக்கானிக். இவரது மனைவி புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்த சுவேதா(19). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். புதுச்சேரி லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் வசித்து வந்தனா். இவா்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சுவேதா அடிக்கடி கைப்பேசியில் பேசிக் கொண்டும், சாட்டிங் செய்து கொண்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏழுமலைக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டது. கைப்பேசியில் பேசக்கூடாது என மனைவியிடம் கண்டிப்பாகக் கூறினாராம். ஆனாலும் சுவேதா கைப்பேசியைத் தொடா்ந்து பயன்படுத்தி வந்தாராம்.

Advertisement

இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஏழுமலை தூங்கி எழுந்தபோது, சுவேதா கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மனைவியை கண்டித்துள்ளாா். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கைப்பேசி சாா்ஜா் ஒயரை எடுத்து மனைவியின் கழுத்தை இறுக்கினாராம். இதில் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்த சுவேதா கீழே விழுந்தாா்.

இந்நிலையில், சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து சுவேதாவின் கழுத்தை அறுத்ததில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் கோரிமேடு காவல் நிலையம் சென்று ஏழுமலை சரணடைந்தாா். போலீஸாா் சுவேதாவின் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.