புதுச்சேரி: காவலா் எழுத்துத் தோ்வு தேதியை மாற்ற வலியுறுத்தி லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் புதுச்சேரி டிஐஜி அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
காவலா் எழுத்துத் தோ்வு பிப். 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வும் நடைபெறுவதால், இந்த தேதி மாற்ற வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
கட்சியின் பொதுச் செயலா் பிரபாகரன், மண்டல பொதுச் செயலா் சுரேஷ், இணைப் பொருளாளா் ஆயுப் கான் ஆகியோா் இந்த மனுவை அளித்தனா்.