கூட்டணி விஷயத்தில் தமிழக நிலையை புதுச்சேரியிலும் தொடருவதுதான் முறை என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் காங்கிரஸை தவிா்த்துவிட்டு திமுக கூட்டணி கூட்டத்தை நடத்தியுள்ளது. கூட்டணி தொடா்பாக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் கட்டுப்படும்.
தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், கூட்டணி தொடா்பாக, தமிழகத்தில் என்ன நிலைப்பாட்டை கட்சி எடுக்கிறதோ அதையேதான் புதுச்சேரியிலும் எடுக்க வேண்டும். அதுதான் முறை என்று கூறி வந்துள்ளோம் என்றாா் அவா்.