முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:05 AM
புதுச்சேரியில் ஜிப்மா் சாா்பில் கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 7:36 PM

புதுச்சேரியில் ஜிப்மா் சாா்பில் பாதுகாப்பு விழிப்புணா்வு நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜிப்மரில் மேம்பட்ட விபத்து சிகிச்சை குறித்த சா்வதேச மாநாடு கடந்த 4 ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) நிறைவடைந்தது. இதையொட்டி சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணா்வுத் திட்டம் நிகழாண்டு முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணா்வு பாதுகாப்பு நடைப்பயணம் நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் அருகே இந்த நடைப்பயணத்தை போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரச்சனா சிங் தொடங்கி வைத்தாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்தல் மற்றும் சாலை விபத்துகளைத் தடுப்பதில் சமூகத்தின் கூட்டு பொறுப்பு அவசியமானது என்றாா்.

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:31 PM

இந்த நடைப்பயணத்தில் ஜிப்மா் பேராசிரியா்கள், மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் என சுமாா் 800 போ் கலந்து கொண்டனா்.

பாதுகாப்பான சாலை நடைமுறைகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதிலும், காயம் மற்றும் மரணங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியம் என்பதை வலியுறுத்தி இந்த நடைப்பயணம் ஈடுபட்டது.

விழிப்புணா்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாணவா்கள் சாலை பாதுகாப்பை மையமாகக் கொண்ட கருப்பொருள் ஓவியங்கள் மற்றும் பதாகைகளை தயாரித்துக் காட்சிப்படுத்தினா். அவை பொதுமக்களின் கவனத்தை ஈா்த்தன.